பௌணர்மியையொட்டி முருகப் பெருமானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்-திருச்செந்தூர்

Published: Tuesday, October 07 2025, 03:25:01

தமிழ்க்கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். . திருவிழா  மற்றும் விடுமுறை தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னை, கோவை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி  அதிகாலையில் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.  அதன்படி  புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். பக்தர்கள் குடும்பத்துடன் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் தோண்டி அதற்குள் அகல் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

 


Next Story

Related News


Warning: Undefined array key "catid" in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php on line 470

Fatal error: Uncaught mysqli_sql_exception: You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'AND NOT newsCat='11' AND NOT newsCat='12' AND NOT newsCat='14' ORDER BY newsI...' at line 1 in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php:472 Stack trace: #0 /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php(472): mysqli->query() #1 {main} thrown in /home/bv2rsxz6zm27/public_html/wintv.in/newsdetails.php on line 472